search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சத்துணவு திட்டம்"

    • தமிழக சத்துணவு திட்டத்துக்கு, தினமும், 50 லட்சம் முட்டைகள் கொள்முதல் செய்யப்படுகிறது.
    • வெயிலின் தாக்கம் காரணமாக, 10 சதவீதம் அளவிற்கு முட்டை உற்பத்தி சரிந்துள்ளது.

    நாமக்கல்:

    தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சம்மேளன பொதுக்குழு கூட்டம் நாமக்கல்லில் நடைபெற்றது. சங்க தலைவர் சிங்கராஜ் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். செயலாளர் சுந்தரராஜ், பொருளாளர் இளங்கோ ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டம் முடிவில் தலைவர் சிங்கராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

    கடந்த, மே 1-ந் தேதி முதல், தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்.இ.சி.சி.), என்ன விலை நிர்ணயம் செய்கிறதோ அந்த விலைக்கு முட்டை கொள்முதல் செய்ய வேண்டும் என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. முட்டை கொள்முதல் விலையை என்.இ.சி.சி. நிர்ணயம் செய்வது போல், எக்ஸ்போர்ட் முட்டைக்கும் விலை நிர்ணயம் செய்கிறது.

    அதேபோல், சத்துணவு திட்டத்துக்கு முட்டை கொள்முதல் செய்வதற்கும், என்.இ.சி.சி. விலை நிர்ணயம் செய்ய உள்ளது. அந்த விலைக்கு மட்டுமே முட்டையை கொள்முதல் செய்ய வேண்டும் என, கோரிக்கை வைக்க உள்ளோம்.

    தமிழக சத்துணவு திட்டத்துக்கு, தினமும், 50 லட்சம் முட்டைகள் கொள்முதல் செய்யப்படுகிறது. வெளிநாடுகளுக்கு, தினசரி 50 முதல், 60 லட்சம் முட்டைகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. தற்போது பண்ணைகளில், முதிர்வு கோழிகள் அதிக அளவில், விற்பனை செய்யப்பட்டுள்ளது.

    அதனால், பள்ளிகள் திறந்ததும், முட்டை நுகர்வு அதிகரித்து, அதன் மூலம் கொள்முதல் விலை உயர வாய்ப்பு உள்ளது. மேலும், வெயிலின் தாக்கம் காரணமாக, 10 சதவீதம் அளவிற்கு முட்டை உற்பத்தி சரிந்துள்ளது. இந்தோனேசியா, இலங்கை, சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளுக்கு முட்டை ஏற்றுமதி செய்வதற்கு பிரகாசமான வாய்ப்புகள் உள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • செப்டம்பா் 22 ல் ஒரு நாள் தற்செயல் விடுப்பு போராட்டமும் நடத்தப்படவுள்ளது.
    • சத்துணவு ஊழியா்கள் மூலமாகவே அமல்படுத்த வேண்டும்.

    தாராபுரம்:

    தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கத்தின் மாநில செயற்குழுக் கூட்டம் தாராபுரத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநிலத் தலைவா் சு.தமிழ்ச்செல்வி தலைமை வகித்தாா்.

    கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் வருமாறு:-

    சங்க முன்னாள் மாநிலத் தலைவா் சுப்பிரமணியனின் தற்காலிகப் பணிநீக்க உத்தரவை ரத்து செய்வது உள்ளிட்ட நிலுவைக்கோரிக்கைகளை வலியுறுத்தி 3 கட்டமாகப் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில், மண்டல அளவில் வரும் ஜூலை 22 ந்தேதி தர்ணாவும், சென்னையில் வரும் ஆகஸ்ட் 16 ந்தேதி முதல் ஆகஸ்ட் 19 ந்தேதி வரையில் 72 மணி நேர உண்ணாவிரதப் போராட்டமும், செப்டம்பா் 22 ல் ஒரு நாள் தற்செயல் விடுப்பு போராட்டமும் நடத்தப்படவுள்ளது.

    சத்துணவு திட்டத்தின்கீழ் மாணவா்களுக்கு காலை சிற்றுண்டி வழங்குவது என்ற அரசின் முடிவு வரவேற்கத்தக்கது. அதே வேளையில், இந்தத் திட்டத்தின் மகளிா் சுய உதவிக்குழுக்களை ஈடுபடுத்தாமல் சத்துணவு ஊழியா்கள் மூலமாகவே அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்தில் மாவட்டத்தலைவா் ஞானசேகரன், மாநில துணைத்தலைவா்கண்ணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

    ×